Home உலகம் அறக்கட்டளையா – கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

அறக்கட்டளையா – கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

0

காசாவில் (Gaza) செயற்படும் அறக்கட்டளைகள் கொலைக்களங்களாக மாறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் (Israel) தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்களே இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான தீ விபத்தில் சிக்கிய ரஃபா ஜி.எச்.எஃப் முகாமில் சமீபத்தில் உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய தாக்குதல்

மே 27 முதல் GHF முகாம்கள் நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோட, இதில் 340 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜபாலியா அகதிகள் 

இந்தநிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் பலி எண்ணிக்கை 54,418 ஆக உயர்ந்துள்ள நிலையில், காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version