Home இலங்கை அரசியல் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அனுர

தேர்தலுக்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அனுர

0

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (12) காலை கையொப்பமிடப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

அனுரகுமார திஸாநாயக்க 

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை கடந்த 6ஆம் திகதி செலுத்தியிருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் கட்டுப்பணத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் செலுத்தியிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version