Home உலகம் அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0

அவுஸ்​திரேலி​யா​வில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தில் தொடர்​புடைய​வர் சந்​தேகிக்​கப்​படும் நபரான சாஜித் அஹ்​ரம் (50) என்பவர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகள்

சந்தேக நபர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் கடந்த 1998 ஆம் ஆண்டு மாணவர் விசா​வில் அவர் அவுஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​ள்ளார்.

இதையடுத்து அவருடைய குடும்​பத்​தினருட​னான தொடர்பு குறை​வாகவே இருந்​துள்​ளதுடன் இரண்டு அல்​லது மூன்று முறை மட்​டுமே அவர் இந்​தியா வந்துள்ளார்.

இவர், இறு​தி​யாக கடந்த 2022 ஆம் ஆண்​டு இந்​தி​யா​வுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல்தாரிகள்

சாஜித் அஹ்​ரமின் மகனான நவீது என்பவர் கடந்த 2001 இல் அவுஸ்​திரேலி​யா​வில் பிறந்​த நிலையில் அவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை வழங்​கப்​பட்​டு உள்ளது.

சாஜித் அஹ்​ரம் ஹைத​ரா​பாத்​தில் வணி​க​வியலில் இளங்​கலை பட்​டப்​படிப்பை முடித்​தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்​திரேலி​யா​வுக்கு இடம்​பெயர்ந்த பின்​னர் அவர் ஐரோப்​பிய பெண்ணை திரு​மணம் செய்து கொண்​ட நிலையில் அவரிடம் இன்​னும் இந்​திய கடவுச்சீட்டு உள்​ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தாக்குதல்தாரிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version