Home இலங்கை அரசியல் மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

0

மட்டக்களப்பை (Batticaloa) நோக்கி முன்னாள் போராளிகள் படையெடுத்து வந்து கொண்டிருப்பதாக
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மட்டக்களப்பிற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து
முன்னாள் போராளிகளை அணி திரட்டுகிறீர்களா  என அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மானின் பணிப்பின் பேரில் என்னால் கடந்த மாதமளவில் முன்னாள்
போராளிகளை ஒன்று திரளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் போராளிகள்

அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் போராளிகள்
எங்களிடம் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் முதல் அங்கமாகவே முன்னாள்
போராளிகளுக்கான ஒன்றுகூடல் ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தலைமை
செயலகத்தில் நாளை (7) நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.

அத்தோடு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை செயலகத்தில் கருணா
அம்மானும், ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணாவும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/ex-combatants-marching-towards-batticaloa-1720283528

NO COMMENTS

Exit mobile version