Home உலகம் கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவில்(Canada)  சில பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவின் ரொறன்ரோ(Toronto), மிசிசாகா(Mississauga) மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப் பகுதிகளிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரொறன்ரோவில், கனமான மழை பெய்து வருவதோடு மிசிசாகாவிலும் கனமான மழை பெய்து கொண்டிருக்கின்றதால் இந்த மழை நீண்டகாலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழல்காற்று எச்சரிக்கை 

வாட்டர்லூ பகுதியில் சுழல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப் பகுதியில் சுழல்காற்று தாக்கியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 3,000 பேர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனால் மேலும் பல வீடுகள் மற்றும் தொழில்முறை இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிசிசாகா தீயணைப்புத்துறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியுள்ளது.

விமான சேவை பாதிப்பு

மேலும், ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வானிலை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு கனமழை எச்சரிக்கை மற்றும் கடுமையான புயல் கண்காணிப்பு எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த கடுமையான வானிலை காரணமாக, மக்களிடம் முன்னெச்சரிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி, தங்கள் பயணத்தை திட்டமிட்டு பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version