Home இலங்கை அரசியல் மொட்டில் இருந்து விலகியவர்களின் நிலை: மகிந்த வெளியிட்டுள்ள தகவல் – செய்திகளின் தொகுப்பு

மொட்டில் இருந்து விலகியவர்களின் நிலை: மகிந்த வெளியிட்டுள்ள தகவல் – செய்திகளின் தொகுப்பு

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பதோடு மொழி உரிமையையும் வழங்குவேன். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.  

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version