ஈரான் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை (Ali Khamenei) கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Nethanyahu) தெரிவித்துள்ளார்
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்தால் மோதல் மேலும் தீவிரமடையும் என்ற கரிசனை காரணமாக இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவரை கொலை செய்வது மோதலை மேலும் தீவிரப்படுத்தாது முடிவிற்கு கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத முயற்சி உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே இஸ்ரேலின் நோக்கமே தவிர மோதலை அதிகரிப்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
https://www.youtube.com/embed/D6Jl2qEjNuw
