Home இலங்கை அரசியல் அரசியல் களத்திலிருந்து ஒதுங்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

அரசியல் களத்திலிருந்து ஒதுங்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

0

தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry )மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச( Chamal Rajapaksa) ஆகியோர் அடங்குவர்.

மூத்த அரசியல்வாதிகள்

ஏனையவர்களில் காமினி லொகுகே(Gamini Lokuge), ஜோன் செனவிரத்ன(John Seneviratne), மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena), பந்துல குணவர்தன(Bandula Gunawardana), மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena .) மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Prof. Tissa Vitarana)ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை, முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரமுனவின் அதிரடி தீர்மானம்

தவிர சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற பாரம்பரியக் கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவு இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளன.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

Source: https://ibctamil.com/article/numerous-mps-to-quit-politics-1728136938

NO COMMENTS

Exit mobile version