Home உலகம் டொனால்ட் ட்ரம்ப் பிரசார மேடையில் மர்ம நபரால் பரபரப்பு

டொனால்ட் ட்ரம்ப் பிரசார மேடையில் மர்ம நபரால் பரபரப்பு

0

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின் மீண்டும் பென்சில்வேனியாவில் (Pennsylvania) இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump)  பிரசார மேடையில் மர்ம நபர் ஒருவர் அவரை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (31) இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில், தாடி வைத்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றுள்ளார்.

தொடர் விசாரணைகள்

இதன்போது, அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளதுடன் சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், மேடையில் எற முயன்ற மற்றும் இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவராத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version