Home முக்கியச் செய்திகள் யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

0

யாழில் முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த
குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து (Thailand) நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி
பொருட்களை இறக்குமதி செய்து , யாழில் (Jaffna) உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு நபர் ஒருவர்  விற்பனை
செய்து வந்துள்ளார்.

தண்டம்

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார
பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (13) வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து , அவரை
எச்சரித்த மன்று , 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/unauthorized-sale-of-food-to-supermarket-in-jaffna-1718356876?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version