Home உலகம் கனடாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்து

கனடாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்து

0

கனடாவில் (Canada) இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களை தடுப்பதற்கு, கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவில், எட்மண்டன் (Edmonton) நகரில் உள்ள சுவாமி நாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், கோவிலின் மீது எதிர்ப்பு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல்

கனடாவில், அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் இவ்வாறான பிரிவினைவாத செயல்கள் நடைறுவதாகவும், இதற்கு எதிராக, கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், கனேடிய அரசாங்கம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தற்போது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கனடாவில் இந்து மத ஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version