Home இலங்கை அரசியல் மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ் (Jaffna) தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரனால், யாழ் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் , கட்சியின் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெறச் சென்ற சிறீதரனுக்கு, வாழ்த்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சி 

தமிழரக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மையில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து  மாவை சேனாதிராஜா விலகுவதாக தெரிவித்திருந்ததுடன்  சிவஞானம் சிறீதரனை பதவியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

யாழ். தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/MkY7MPtcFQA

NO COMMENTS

Exit mobile version