இன்று 18 ம் திகதி காலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகிறது.
இதன் காரணமாக நுவரெலியா பதுளை வீதியில் கிறேகரி ஏரி பகுதியில் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது.
பணி மூட்டம் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிதமான மழை பெய்து வருவதால் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் தற்போது உள்ளது.
முச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிரிய ரக வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
Source: https://samugammedia.com/rain-with-fog-in-nuwara-eliya-district-1781776102

