முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மரண தண்டனை தீர்ப்புகள் வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் பிடித்திருக்கும் – ஸ்ரீநேசன் ஸ்ரீநேசன் விமர்சனம்

ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள். 

ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக் கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம் செலுத்தியவர் இருக்கின்றார். 

அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது சிந்திப்பார், ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என சிந்திப்பார்.

அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம். தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.  

இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/with-the-death-penalty-verdicts-in-place-the-former-president-must-be-feeling-feverish–srinesan-srinesans-critique-1785652976

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.