இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் உடல்நலக் காரணங்களை முன்வைத்து முன்பு ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யோஷித ராஜபக்ஷவும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Source: https://samugammedia.com/former-navy-commander-vasanth-karannakod-arrested-1783058821

