மன்னார் – நாகதாழ்வு பகுதியில் உள்ள பொது மயானத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆக்கிரமித்து
வருவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பொது மயானமானது, ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கையின் வனவிலங்கு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், யுத்தம் முடிவடைந்த போதிலும் மயானம் இன்னும் கிராமத்துக்கு வழங்கப்படவில்லை.
மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த
சிரமத்தில் மக்கள்
இந் நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக வெற்று நிலங்களை கண்டுபிடிக்க
வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடந்த வாரம் மன்னாரில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையின் போது
வெற்று நிலத்தில் இறுதி சடங்குகள் மற்றும் சடங்குகளை செய்ய வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை தேர்தலில் களமிறக்க வேண்டும் : ஸ்ரீநேசன்
50 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்க தயாராகும் இலங்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |