யாழ். (Jaffna) சாவகச்சேரியில் மா மரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறாக 60 சென்ரிமீற்றர் நீளத்தில் மிக பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கின்ற பொழுதும் இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.
பார்வையிடும் மக்கள்
மேலும், சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வை இட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.