முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர்

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையளாமாகவும் இந்த தேர்தல் இருக்குமென தமிழ்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Arianetheran)  தெரிவித்துள்ளார்.

நமக்காக நாம் என்ற தேர்தல் பிரச்சாரப்பணிக்காக பா.அரியநேத்திரன் இன்று (04) வவுனியாவிற்கு (Vavuniya) விஜயம் செய்துள்ளார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சின்னத்துக்கு ஆதரவு 

இர் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றனர சங்கு சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர்.

கடந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் மற்றும் பல துன்பங்களை சந்தித்திருக்கின்றோம் இந்த தேர்தல் என்பது நான் வெற்றி பெறுவதற்கானதல்ல.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர் | Tamil General Candidate Campaign

இனம் வெற்றிபெற வேண்டும் என்பதுவே எனது இலக்கு இனத்தின் அடையாளமாகவே நான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன் எனது சின்னத்துக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு நீங்களே வாக்களிப்பதாகவே அர்த்தம்.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையளாமாகவும் இந்த தேர்தல் இருக்கும் இந்ததேர்தலின் முடிவுகள் சர்வதேசத்தின் மனசாட்சியை நிச்சயம் உறுத்தும்.

சுயநிர்ணய உரிமை

இந்தியாவிற்கும் ஒரு செய்தியினை சொல்லும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை வழங்க வேண்டும் என்று அரசையும் வலியுறுத்தும்.

கடந்த காலங்களில் பல போராட்டங்களை தமிழினம் கண்டுள்ளது இது புள்ளடி போடும் ஒரு போராட்டம் அனைவரும் இந்த பணியினை உறுதியுடன் செய்யவேண்டும்.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர் | Tamil General Candidate Campaign

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடற்றொழிலாளர் பிரச்சனை விவசாயிகள் பிரச்சினை உள்ளடக்கப்பட்டிருந்தது அது பிரதி எடுக்கப்படும் போது தற்செயலாகவே விடுபட்டுள்ளது.

அந்த விடயங்கள் இறுதிப்பிரசுரத்தில் நிச்சயம் உள்ளடக்கப்படும் கடற்றொழிலாளர் பிரச்சினை என்பது பாரிய பிரச்சினை அத்தோடு இந்தியாவை பகைப்பதற்கும் வெறுப்பதற்கும் அப்பால் இந்தியாவை (India) அணைத்துக்கொண்டு கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

மேலும், தேர்தலின் பின்னரும் நான் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் அதில் மாற்றுக்கருத்தில்லை கட்சியால் என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது சந்தர்ப்பம் வரும் போது அதற்கான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.