இதுவரை காலமும் வடக்கு – கிழக்கில் வினைத்திறனற்ற உறுப்பினர்களை நாடாளுமன்றிற்கு அனுப்பியமை காலம் காலமாக தமிழ் மக்கள் செய்த பிழை எனவும், அதன் காரணமாகவே பெரும் சிக்கல்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சிவபிரகாசம் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சியமைக்கும் அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களுக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்குமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, இதுவரைகாலமும் மக்களை ஏமாற்றி ஆட்சி பிழைப்பு நடத்திய தரப்பினர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,