77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திர தின விழா
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளவுள்ளது.
77 ஆவது சுதந்திரதின வைபவத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதியின் தலைமையிலும் மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.