மிருணாள் தாகூர்
தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில்தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி-யில் வெளிவந்து நம்பர் 1 இடத்தை பிடித்த விடாமுயற்சி.. விவரம் இதோ
மனம் திறந்த மிருணாள்
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம், எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசை என தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மிருணாள் தாகூர், “கமல் ஹாசனுடன் நடிக்க ஆசை” என கூறினார்.
பின் எந்த நடிகருடன் நடனமாட ஆசை என கேள்வி கேட்க, “அதுவும் கமல் ஹாசனுடன் தான். அவர் நடனத்திலும் மற்றவர்களை ஓரம் கட்டி விடுவார்” என கூறியுள்ளார்.