முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
அதன்படி, இன்று (17.11. 2025) காலை 9.00 மணியளவில் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

