பலத்த காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதியே இடிந்து விழுந்தது.
பலத்த காற்று காரணமாக பாலத்தின் 100 அடி பகுதி இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு
பாலம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த வழியால் ஒரு திருமண விழாவில் இருந்து 65 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தும் சென்றது.
எனினும் இந்த விபத்தில் இவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
https://www.youtube.com/embed/MQXNFCm4zdk?start=42

