கனடாவில் கடல் யானை ஒன்று பாதுகாப்பாக வீதியை கடப்பதற்காக காவல்துறையினர் வீதியை மூடியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஓக்பே பகுதியில் உள்ள வீதியே இவ்வாறு காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
இதன்போது, கடல் யானை பாதுகாப்பாக தரையிலிருந்து நீர்நிலையை சென்றடைவதற்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள்
கடல் யானை விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் வீதிப் போக்குவரத்தை இரத்து செய்திருந்தனர்.

இதனையடுத்து கடல் யானை பாதுகாப்பாக நீர் நிலையை சென்றடைந்ததன் பின்னரே, வழமையான வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கடல் யானை குறித்த பகுதியில் பிரபல்யமானது எனவும் இதற்கு எமர்சன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Source: https://ibctamil.com/article/road-closed-in-canada-by-elephant-seal-1714414681

