சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை நீடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தடையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் (Chandrika Kumaratunga) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விஜயதாச ராஜபக்ச நியமனம்
இதேவேளை மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

எனினும், மே மாதம்12 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதைத் தொடர்ந்து மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் பிரிவு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) கட்சியின் புதிய தலைவராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/court-further-extends-injunction-against-maithri-1718174292

