இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையில் புனரமைப்பு தொடர்பான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது குழு இன்று (24) நாட்டிலிருந்து புறப்படுவார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்போது, மொத்தமாக 20 பயணியாளர்கள் அந்நாட்டிற்கு பயணம் செய்யவுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு கடவுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்பு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நடைமுறை பரீட்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குழு, இந்த ஆண்டு ஜனவரியில் இஸ்ரேலுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப் பயன்படுத்தப்படும் லாட்டரி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலை பெற்ற 38 வேலை தேடுபவர்களுக்கு விமான பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வும் இன்று (24) பணியகத் தவிளார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இந்த குழுவும் இன்று (24) இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 2025 முதல் 1266 இலங்கையர்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/two-groups-travel-to-israel-for-employment-today-1742823035

