நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்புச் சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாக கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 150 பேர் வரையில் காயமடைந்தனர். இதனால் சிறை உள்ள வளாகத்தில் பதற்ற சூழல் காணப்படுகின்றது.
இதன் காரணமாக நீர்கொழும்பு சிறையில் இருக்கும் கைதிகள் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளிற்கும் பிரித்து அனுப்பப்படுகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் 60 கைதிகள் இன்று கொண்டு வரப்பட்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/60-prisoners-transferred-from-negombo-prison-to-jaffna-prison-1783441735

