சுந்தர் சி
இந்த ஆண்டு அரண்மனை 4 எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் இதற்கு முன் வெளிவந்த அரண்மனை படங்களை விட சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டது.

அதுவே இப்படத்தின் வெற்றியை தீர்மானித்தது. அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்த நிலையில், கேங்கர்ஸ் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். வடிவேலு இப்படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்திருந்தது.

கலகலப்பு 3
இந்த நிலையில், கலகலப்பு 3 குறித்து சுந்தர் சி-யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் கண்ணா ரவி கூட்டணியில் கலகலப்பு 3 உருவாகவுள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என பதிவிட்டுள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என குறிப்பிடும் வகையில் ‘2025’ என்றும் இந்த பதிவில் கூறியுள்ளார் நடிகை குஷ்பூ.
Source: https://cineulagam.com/article/sundar-c-next-movie-kalakalapu-3-update-by-khushbu-1731911431

