வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வரி நிலுவையை வசூலிக்கும் நோக்கில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

