குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இம்மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
கிடைத்துள்ள விண்ணப்பங்கள்
அதன் தகவல்களை கணனி மயமாக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/low-income-sri-lankans-aswesuma-money-1719914774

