மாரி சீரியல்
மாரி, ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
வருங்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பெண்ணின் கதையாக மாரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த ஜுலை 2022ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 800 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

1000 எபிசோடுகளை தாண்டி மாரி சீரியல் ஒளிபரப்பாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
வெளியேறிய பிரபலம்
சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வர தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் மாரி தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை, நாயகியாக நடித்துவந்த அஷிகா படுகோன் தான்.
தான் வெளியேறியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டவர் எதற்காக வெளியேறினார் என்ற விவரத்தை அறிவிக்கவில்லை.

Source: https://cineulagam.com/article/popular-actress-quits-zee-tamizh-maari-serial-1737358029

