முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு – பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அரச புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு உயர்ந்தபட்சம் 20 மில்லியன் ரூபாய் வீதம், பட்டப்படிப்பின் முழுமையான நான்கு ஆண்டுகளுக்கும் உயர்ந்தபட்சம் 80 மில்லியன் நிதி அரசால் வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டு நாணய கொடுப்பனவு

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முப்பது மாணவர்கள் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் | Opportunity To Study At Foreign Universities

எஞ்சிய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதானமாக வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் பணப்பெறுமதி குறைவடைந்தமையால் மாணவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய ஒருசில கொடுப்பனவுகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், செலாவணி விகிதம் உறுதிப்பாட்டை எட்டும் வரைக்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை செலாவணி விகிதத்திற்கு சீராக்கல் கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Source: https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.