யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளதுடன் மின் கம்பத்திலும் தீ பரவி மின் வயர்களும் எரிந்து அறுந்து விழுந்துள்ளன.
தீயை அயலவர்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் அண்மைய நாட்களாக சவுக்கம் காடு மற்றும் வயல் நிலங்கள் தீ பரம்பல் ஏற்பட்டு வயல் நிலங்கள் என்பன எரிந்து நாசமாக்கியுள்ளன.

