சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பு’ இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் விழா தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது.

அந்த விஷயம்
இதில், சூர்யா அவரது கும்பம் அனைவரும் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தனர். அந்த விழாவில், கார்த்தி சூர்யாவின் மகன் மற்றும் மகள் குறித்து பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, தேவ் மற்றும் தியா இருவரும் அகரம் அமைப்புக்கு உதவி வருவதையும். அதன்படி, அகரம் அமைப்புக்கு மாதம் 300 திட்டத்தில் தியா மற்றும் தேவ் இருவரும் தங்கள் பாக்கெட் மணியை கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

Source: https://cineulagam.com/article/karthi-open-talk-about-suriya-kids-1754485120

