கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அற்தவகையில், உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் (A/L exam result) தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் குறித்து ஊடகங்கள் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சையின் பெறுபேறுகள்
இம்முறை பரீட்சைக்கு மொத்தம் 333,183 மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்தத் தேர்வு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, 2024 வரை நாடு முழுவதும் 2312 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சையின் உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பம் (66) பாடத்திற்கான நடைமுறைத் தேர்வுகள் 2025 பெப்ரவரி 08-10 வரை நடைபெற்றன.
https://www.youtube.com/embed/F7ii3wotZr0