Home இலங்கை அரசியல் ரணில் – அனுரவிற்கிடையிலான மறைமுக கூட்டணி : கடுமையாக விமர்சித்த சஜித்

ரணில் – அனுரவிற்கிடையிலான மறைமுக கூட்டணி : கடுமையாக விமர்சித்த சஜித்

0

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசியல் போட்டி நாட்டுக்கான தெரிவு அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை எஹலியகொடவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணிலும் மற்றும் அனுரவும் இருவருக்கிடையில் டீல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஒருவர் தனது தானே ஒற்றுக்கொண்டமையை வரலாற்றில் எங்காவது பார்த்து இருக்கின்றீர்காளா ?

ரணிலிற்கு வாக்களிக்கும் நோக்கில் மொட்டு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒரு சிலர் இருப்பீர்களானால் தயவு செய்து அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/alliance-between-ranil-and-anura-1725643847

NO COMMENTS

Exit mobile version