இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கை செல்ல வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிகொத்த தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, “2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றால் இலங்கை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

இதற்கு காரணம் பொருளாதாரத்தை நடத்துவது குறித்து அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததே ” எனக் கூறியுள்ளார்.
Source: https://ibctamil.com/article/another-presidential-elections-in-two-years-1725631039

