முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக இரு மகாநாயக்க தேரர்களிடமும் எதிரணிப் பிரமுகர்கள் முறையீடு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழு, மல்வத்து,
அஸ்கிரி உபய மகா விகாரையின் இரண்டு மகாநாயக்க தேரர்களையும் இந்த விவகாரத்தில்
தலையிடுமாறு கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை அரசு துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டி இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சர்கள் அநுரபிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ், நாடாளுமன்ற
உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனக
வக்கும்புர, பிரேமநாத் சி. தொலவத்த, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ
உள்ளிட்ட குழு நேற்று மல்வத்து, அஸ்கிரி உபய மகா விஹாரைக்குச் சென்று இந்தக்
கோரிக்கையை முன்வைத்தது.

அநியாயக் குற்றச்சாட்டு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை அநியாயக் குற்றச்சாட்டுகளின்
பேரில் தொடர்ந்து தடுத்து வைத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பெரும்
முயற்சிகளை மேற்கொண்ட போர்வீரர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும்
வேலைத்திட்டம் குறித்து மகாநாயக்கர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு, ஐக்கிய
நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் முன்னாள்
அமைச்சர் உதய கம்மன்பிலவைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் தேரர்களிடம்
சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக இரு மகாநாயக்க தேரர்களிடமும் எதிரணிப் பிரமுகர்கள் முறையீடு | Arrests Of Npp Complaints To Mahanayake Theros

முப்படைகள், புலனாய்வு அதிகாரிகள், அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சி அரசியல்
தலைவர்கள், மகா சங்கத்தினர் மற்றும் இந்த நாட்டில் அரசுக்கு ஆலோசனை வழங்கி
வழிநடத்தும் மகாநாயக்கர்கள் ஆகிய தரப்புகளின் தலைவர்களை அரசு பழிவாங்குகின்றது
என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இரண்டு மகா விகாரைகளுக்கும்
விஜயம் செய்வதன் நோக்கம், இந்த நாட்டில் அரசுக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தும்
மகாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினருக்குப் பொருத்தமான உண்மைகளை
முன்வைப்பதும், அரச தலைவருக்கு தேரர்கள் ஆலோசனை வழங்குவதை உறுதி செய்வதுமாகும்
என அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.