முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படலந்த அறிக்கை விவகாரத்தில் நழுவும் ரணில்!! அரசாங்கத்தின் முடிவு என்ன..

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்த விசேட அறிக்கையொன்றை இன்று (16) வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் தன்னை ஒரு சாட்சியாளராகவே அழைத்திருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க அதன்போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில், “1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) நாடு முழுவதும் வன்முறைகைளை உருவாக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

படுகொலைகள்

அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வர்த்தக மண்டலம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தன, அவற்றை பாதுகாக்க இராணவ துருப்புக்கள் வரவழைக்கப்பட்டன.

படலந்த அறிக்கை விவகாரத்தில் நழுவும் ரணில்!! அரசாங்கத்தின் முடிவு என்ன.. | Batalanda Report Ranil S Speacial Statement

இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக இலங்கை உர உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது, அந்த இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் ஏற்கனவே அங்கு பல வீடுகளில் வசித்து வந்தனர்.

அந்த வன்முறை காலகட்டத்தில், சபுகஸ்கந்த காவல் நிலையம் தாக்கப்பட்டு, காவல் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார்.

அப்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, வீட்டு வளாகத்தில் உள்ள காலியாக உள்ள வீடுகளை இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி காவல் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் பொறுப்புக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சபை உறுப்பினர் ஒருவர், ஒரு காவல்துறை சார்ஜன்ட் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், மற்றொரு மாகாண சபை உறுப்பினரின் வீடு தாக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு

வீழ்ச்சியடைந்த வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டில் அமைதியையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய அதிகாரத்தில் இருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

படலந்த அறிக்கை விவகாரத்தில் நழுவும் ரணில்!! அரசாங்கத்தின் முடிவு என்ன.. | Batalanda Report Ranil S Speacial Statement

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, படலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க படலந்த ஆணைக்குழுவை நியமித்தார்.

அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன்.அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

இந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசலை மட்டுமே நோக்கமாக கொண்டு மாத்திரமே நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

மறைமுக பொறுப்பு 

ஆணைக்குழு அறிக்கை முடிவில் ஒரு அமைச்சராக, காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வழங்குவது தவறு என குறிப்பிடப்பட்டிருந்தது.

வீடுகளை காவல் துறை மா அதிபரிடம் ஒப்படைத்து, பின்னர் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான நடைமுறையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.

படலந்த அறிக்கை விவகாரத்தில் நழுவும் ரணில்!! அரசாங்கத்தின் முடிவு என்ன.. | Batalanda Report Ranil S Speacial Statement

இந்த செயலுக்கு காவல் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது.

இதன்படி, ஆணைக்குழுவின் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய விடயங்கள் எதற்கும் நான் பொறுப்பல்ல.

1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது.முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்குப் பொருந்தாது.

அரசியல் ஆதாயம்

அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

படலந்த ஆணைக்ழு அறிக்கையை மறைத்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது.

இது 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அமர்வு அறிக்கையாக இருந்தது. ஆனால் இந்த விடயத்தில் யாரும் விவாதம் கோரவில்லை.

குறைந்தபட்சம் ஜே.வி.பி. அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. பலர் அந்த அறிக்கையை ஏற்கவில்லை.

படலந்த அறிக்கை விவகாரத்தில் நழுவும் ரணில்!! அரசாங்கத்தின் முடிவு என்ன.. | Batalanda Report Ranil S Speacial Statement

எனவே, நாடாளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறலாம்.

இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் மூலம் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முயன்றதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிக்கையை விவாதிக்கும் பாரம்பரியம் இந்த நாட்டிலோ அல்லது பிற நாடாளுமன்றங்களிலோ இல்லை.” என தெரிவித்துள்ளார்.

 

https://www.youtube.com/embed/uVkh9xsZJws

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.