முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் சிறை விதியை தடுத்த நகர்வுகள் அம்பலம்

ஹெல்பிங் அம்பாந்தோட்டை ’ ஊழல் வழக்கு தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவந்தபோதும் (2025) அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்‌சவுக்கு எதிராக திரும்பாத அரசியல் நகர்வுகள் குறித்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் ஜனாதிபதிகள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரை கைது செய்தும் விசாரணை செய்தும் வருகிறது.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை ’ ஊழல் மகிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட பாரிய ஒரு குற்றச்சாட்டாகும்.

கைது செய்வதற்கான முயற்சி

இது தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டை அடுத்து, தம்மை கைதுசெய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை
மகிந்த தாக்கல் செய்திருந்தார்.

மகிந்தவின் சிறை விதியை தடுத்த நகர்வுகள் அம்பலம் | Helping Hambantota Moves Freed Rajapaksa Prison

இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்திருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான குழு அவரை விடுதலைசெய்ததோடு கபீர் ஹசீமை கடுமையாக சாடியதாக 2014ஆம் ஆண்டு வெளியான ஒரு சர்வதேச ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அதே செய்தியில் ஹெல்பிங் அம்பாந்தோட்டை ’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மகிந்த ராஜபக்‌சவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறியமையையும் மேற்கோள்காட்டியிந்தது.

ஹெல்பிங் அம்பாந்தோட்டை

குறித்த வழக்கில் மகிந்தவுக்கு எதிரான மூலங்களே அதிகம். நான் அந்த நேரத்தில், தனக்கு தெரிந்தவரையில் நீதியை நிறைவேற்றினேன் என்றும் முன்னாள் தலைமை நீதியரசர் கூறிய விடயத்தையும் மேற்கண்ட செய்தி சுட்டிக்காட்டியிருந்தது.

மகிந்தவின் சிறை விதியை தடுத்த நகர்வுகள் அம்பலம் | Helping Hambantota Moves Freed Rajapaksa Prison

ஹெல்பிங் அம்பாந்தோட்டை ” வழக்கின் தீர்ப்பை தவறாக வழங்கியதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகவும் அவரால் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறென்றால் அதனுடன் தொடர்புடையவர்கள் யார்? அந்த வழக்குத் தீர்ப்பு எதை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது? யாருக்கு சாதகமாக அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது? என்று முழு நாட்டுக்கும் தெரிந்திருக்ககூடும் என தற்போதைய அரசியல் தலைமைகள் கூறிவருகின்றனர்.

மேலும் குறித்த அரசியல் தலைமைகள், அநுர அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்குமா? என்றும் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை ‘ வங்கிக் கணக்குகளில் இடம்பெற்ற இந்த மோசடி மிகப்பெரும் ஊழலாகும்.

மகிந்த ராஜபக்சவின் சொந்த தொகுதியான அம்பாந்தோட்டைக்கு உதவுவதற்காக ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை” நிதி திட்டம் உருவாக்கப்பட்டது.

இதில் கிட்டத்தட்ட 83 மில்லியன் இலங்கை ரூபாய் (தோராயமாக 820,000 அமெரிக்க டாலர்கள்) தொடர்பான நம்பிக்கை மீறல் நடந்ததாகக் கூறி, கணக்குகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.

அத்தோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு சர்வதேச நன்கொடையாளர்கள் அனுப்பிய பணம், தனியார் நடத்தும் “ஹெல்பிங் அம்பாந்தோட்டை ” நிதிக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன.

கபீர் ஹாஷிம் 

அப்தோதைய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில்,

 ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை ‘ கணக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான சி.ஐ.டி விசாரணைகளின் போது, ​​பிரதமரின் செயலாளர் லலித் வீரதுங்க, பல வெளிப்படையான முரண்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட பல முக்கிய விடயங்களை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டார் என்று கூறியுள்ளார்.

மகிந்தவின் சிறை விதியை தடுத்த நகர்வுகள் அம்பலம் | Helping Hambantota Moves Freed Rajapaksa Prison

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை அவசரமாகத் தணிக்க ஒரு நல்லெண்ணம் கொண்ட பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 83 மில்லியன், பிரதமரின் சகோதரி மற்றும் அவரது சகோதரர் கையொப்பமிட்ட முகவரியுடன் ஒரு தனியார் வங்கிக் கணக்கில் எவ்வாறு இரகசியமாக வைக்கப்பட்டது என்பதை வீரதுங்க விளக்கத் தவறியது ஏன் என்று ஹாஷிம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் சுனாமி துயர வரலாற்றில் இந்த கொடூரமான அத்தியாயத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இருவரின் நேர்மையான நம்பிக்கைகள் குறித்து ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் ஒரு கேள்வியை எழுப்புகிறது.

மிக முக்கியமாக, பொது நிதியில் இருந்து ரூ. 83 மில்லியன் அனுப்பப்பட்ட “ஹெல்பிங் அம்பாந்தோட்டை ” கணக்கில், பிரதமரின் சகோதரியின் முகவரி, மிரிஹான பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கான காரணத்தை அவர் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது நல்லது என கபீர் ஹாஷிம் தனர் அறிக்கையில் விளக்கியிருந்தார்.

இந்தக் கணக்கில் கையொப்பமிட்டவர்கள், தங்கள் அலுவலகப் பணிகளில் பணியாற்றும் பொது அதிகாரிகள் என்பதற்குப் பதிலாக, பிரதமரின்(அப்போதைய) மூன்று நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தங்கள் சொந்தப் பணிகளில் செயல்படுகிறார்கள் என்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்படி இது தொடர்பில் அக்காலப்பகுதியில் மகிந்த சமர்ப்பித்த அமைச்சரவைக் குறிப்பில் ஹெல்பிங் அம்பாந்தோட்டை கணக்கு மற்றும் கையொப்பமிட்டவர்களின் பெயர்கள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை.

83 மில்லியன் 

தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வரவு வைக்கப்பட்ட ரூ. 28.36 மில்லியன் தொடர்பான முழு கணக்கு விவரங்களும் (எப்படியும் பொது மக்களுக்குத் தெரிந்தவை) கூறப்பட்ட பிறகு, மிக அதிகமான ரூ. 83 மில்லியன் எங்கு சென்றது என்பதை அமைச்சரவைக்கு தெரிவிக்கவும் இல்லை என கூறப்படுகிறது.

மகிந்தவின் சிறை விதியை தடுத்த நகர்வுகள் அம்பலம் | Helping Hambantota Moves Freed Rajapaksa Prison

மேலும், உண்மையில், இந்த விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்றும் கபீர் ஆஷிமால் குற்றம் சுமத்தப்பட்டது.

அப்படியானால், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த துயர நாளில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் போதுமான தங்குமிடம் அல்லது வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கின்றனர்.

இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் தாராள மனப்பான்மை இருந்தபோதிலும் பலர் இன்னும் துன்பப்படுகிறார்கள்.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக போட்டியிடும் ஒருவர் மக்களின் துன்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதா இவற்றுக்கெல்லாம் காரணம்?

மக்களின் வலியை விட தனது சொந்த தனிப்பட்ட இலாபத்தையே முதன்மைப்படுத்தி வருவதா இலங்கையின் பெரும்பாலான அரசியல்வாதிகளின் எண்ணம்? 

   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.