வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரணிலிடம் முன்வைக்கப்படவுள்ள கோரிக்கை
இந்த கோரிக்கையை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே
10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பலர் பயன்படுத்துகின்றனர் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/m-ps-have-requested-import-of-duty-free-vehicles-1714502445

