வடக்கு – கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும்.
அரசியல் கைதிகளை விடுதலை
தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இதற்கு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்க நான் தயாராக இருக்கின்றேன்.
நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/namal-said-he-will-release-political-prisoners-1725512059

