முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவின் எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த 9ஆம் திகதி தனது 86வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 உயில் பற்றிய விவரங்கள்

 இந்நிலையில் உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன்படி ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா | Ratan Tatas Share Of The Property Cook To Pet Dog   

ரத்தன் டாடா பெயரில், ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் சொத்துக்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை ‘டிட்டோ’ என்ற தனது வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார்.

வீட்டுப் பணியாளருக்கும் பங்கு

மேலும் டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா | Ratan Tatas Share Of The Property Cook To Pet Dog

அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரத்தன் டாடாவின் நண்பர்

மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்த நிலையில், அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்துள்ளார்.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா | Ratan Tatas Share Of The Property Cook To Pet Dog

மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தை பகிர்ந்தளித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.