முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம்

தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக
தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி
மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவியை
ஏற்று எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் இம்தியாஸிடம் சஜித்
பிரேமதாச கூறியதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

தவிசாளர் பதவி

அன்று முதல் இன்று வரை அரசியல் வாழ்வில் தனது நல்லபிப்பிராயத்தை காப்பாற்றி
வரும்,
ஆளுந் தரப்பு, எதிர்தரப்பு அனைவராலும் விரும்பப்படும், மதிக்கப்படும் ஓருவரான
இம்தியாஸ் போன்ற ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருப்பது இந்த
தருணத்தில் கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம் | Sajith S Decision To Appoint Vice President Sjp

ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை
ஆதரிக்கும் ஓருசிலர் தவிசாளர் பதவிக்கு வேறு சிலரின் பெயர்களை முன்மொழிந்து
வருவதாகத் தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கம் முதலே கட்சியை நல்ல
பாதையில் இட்டுச் செல்வதில் இம்தியாஸின் கடும் உழைப்பு ஆளுங்கட்சி, எதிர்க்
கட்சி என சகலரும் தெரிந்த உண்மையாகும்.

தேர்தல் அரசியல்

அவ்வாறே, ஐக்கிய மக்கள் சக்தியை அதன் கொள்கைகளோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில்
சரியாக ஸ்தானப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளுக்கும், கொள்கை ரீதியிலான
அரசியலை முன்னெடுத்து வரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும்
பொறுத்தமானவர் என்பதனாலயே சஜித் பிரேமதாச இத்தீர்மானத்துக்கு வந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம் | Sajith S Decision To Appoint Vice President Sjp

ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து கட்சியின் முதலாவது பதவி
நிலைகளுக்கான நியமணத்தின் போது தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையே சஜித்
பிரேமதாச நியமித்திருந்ததோடு, கட்சியின் அப்போதைய மற்றும் எதிர்கால நலன் கருதி
அத்தவிசாளர் பதவியை முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவரான பொன்சேகாவுக்கு
விட்டுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து கொண்ட டலஸ் அலகப்பெரும
தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையினரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை
களுத்தறை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு பிரவேசிக்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.