கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் விசேட பேராளர் மாநாடு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த மாநாடானது இன்று(05) காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் சுப்பையா மனோகரன்
தலைமையில் இடம்பெற்றது.

இதில் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
முருகேசு சந்திரகுமார் மற்றும் சமத்துவ கட்சி சேர்ந்த பிரதேச சபை
உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.


