முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா!

உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் இறுதிப் பயணத்தில் கப்பலில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவரின் சட்டைப்பைக் கடிகாரம் £1.2 மில்லியன் பவுண்டுகளுக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையில், தங்கத்தினாலான இந்த சட்டைப்பைக் கடிகாரம் (gold pocket watch) ஏலத்தில் மேற்குறிப்பிட்டவாறு பிரமிக்க வைக்கும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த மிகவும் செல்வந்தரான ஜோன் ஜேக்கப் அஸ்டரின் (John Jacob Astor) உடலில் இருந்து மீட்கப்பட்ட இந்தக் கடிகாரம், £100,000 (பவுண்டுகள்) முதல் £150,000 (பவுண்டுகள்) வரையிலான மதிப்பீட்டை விட கணிசமாக அதிகமான விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

கடிகாரம் கண்டெடுக்கப்பட்டது

ஜோன் ஜேக்கப் அஸ்டர், ஒரு தொழிலதிபரும் சமூக பிரபலமும் ஆவார். கடந்த 1912 ஆம் ஆண்டு வடக்கு அத்திலாந்திக் கடலில் டைட்டானிக் கப்பல் (Titanic) மூழ்கிய போது உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா! | Titanic Gold Pocket Watch Sold For Billions

கப்பல் விபத்து நடந்த சமயத்தில் நின்றபடி இருந்த இந்த கடிகாரம், சில நாட்கள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்ட போது அவரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இங்கிலாந்தின் Devizes மற்றும் Wiltshire உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அன்ட் சன் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஏலம், உலகெங்கிலும் உள்ள கலைப் பொருள் சேகரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் இலக்கு எது தெரியுமா!

அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் இலக்கு எது தெரியுமா!

டைட்டானிக் நினைவுச்சின்னங்கள்

இதில் அமெரிக்காவில் உள்ள ஒரு தனிப்பட்ட சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வெற்றி பெற்று இந்தத் தங்க கடிகாரத்தை வாங்கியுள்ளது மாத்திரமல்லாமல், டைட்டானிக் நினைவுச்சின்னங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனைக்கு போன பொருளாகவும் இந்த தங்க சட்டைப்பைக் கடிகாரம் மாறியுள்ளது.
 

இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா! | Titanic Gold Pocket Watch Sold For Billions

டைட்டானிக் கப்பல் கதை நிகழ்ந்தேறி, ஒரு நூற்றாண்டைக் கடந்துள்ள நிலையில் அது சார்ந்து தொடர்ந்து வெளிப்படும் கலைப்பொருட்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதனை இதன் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றுடன் கலந்த இந்தத் துயரத்தின் சாயல் கொண்ட அஸ்டரின் கடிகாரம், அந்த துன்பகரமான இரவில் இழந்த உயிர்களுக்கான சக்தி வாய்ந்த சின்னமாக இன்றளவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்