Home முக்கியச் செய்திகள் சிறையிலுள்ள கணவருக்கு சம்பு போத்தலில் கஞ்சா கொண்டு சென்ற மனைவி

சிறையிலுள்ள கணவருக்கு சம்பு போத்தலில் கஞ்சா கொண்டு சென்ற மனைவி

0

ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை சம்பு போத்தலில் மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் கொடுக்க கொண்டு சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

சந்தேக நபர் கொண்டு வந்த சம்பு போத்தலில்

சிறைக்காவலர்களான அமில அபேசேகர மற்றும் நியாமிகா புஷ்பலதா ஆகியோர் சந்தேக நபர் கொண்டு வந்த சம்பு போத்தலில் 9000 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6410 மில்லிகிராம் கஞ்சாவை கண்டுபிடித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக களுத்துறை வடக்கு காவல்துறையினரிடம ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி

களுத்துறை வடக்கு பிரதான காவல்துறைபரிசோதகர் தமித் ஜயதிலகவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version