திருகோணமலை மாவட்டம், கந்தளாய் சூரியபுர பகுதியில் அமைந்துள்ள காந்தி வெவ (Gandhi Wewa) கடுமையான வரட்சியினால் முற்றாக வறண்டு நீரின்றி காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
குறித்த நீர்த்தேக்கத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகள் நீர் பற்றாக்குறையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நீர்த்தேக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கால்நடைகளுக்கான குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் கால்நடை வளர்ப்பாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது காந்தி வெவ நீரின்றி வெடிப்புகளுடன் வறண்டு காணப்படும் நிலை அப்பகுதி மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. வரட்சி தொடருமானால், மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

