கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது ஹமில்டனில் நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், விருந்துபசாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இந்த விருந்துபசாரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.