தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின்
37ஆவது நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை மாலை மன்னார் ஆட்காட்டி
வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில்
முன்னாள் போராளிகள், உறவினர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது மாலதியின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவித்து
மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, நேற்று (10) கிளிநொச்சியிலும் (Kilinochchi) முன்னாள் போராளி மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரின் நினைவாக தர்மபுரம் பிரதேசத்தைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Source: https://ibctamil.com/article/37th-anniversary-of-female-hero-ltte-malathi-1728630607

